Wednesday, February 29, 2012

ஆளும் கிரகங்களும் ஆட்சியாளர்களும்.

ஜோதிட சாஸ்திரம் உருவான காலம் முதல் ஜோதிடர்களுக்கு என்று ஒரு மரியாதை இருந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்திலிருந்து அரசர்கள் ஒரு காரியத்தை செயல் படுத்த வேண்டும் என்றால் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் அந்தக் காரியம் வெற்றி அடையுமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதை நன்றாக ஆராய்ந்து வெற்றியில் முடியும் என்றால்தான் அந்தக் காரியத்தையே செய்வார்கள். போர் காலத்திலும் இது போன்றேதான் ஜோதிடரின் கூற்றின் துணை கொண்டு நல்ல நாள் குறித்து போருக்குச் செல்வார்கள். இராமாயண காலத்தில் இராவணன் தனக்கும், தன் குலத்திற்கும் இராமனால்தான் அழிவு என்று தெரிந்தவுடன் தனக்குப் பிறக்கும் குழந்தையின் (இந்திரஜித்) ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் லாப ஸ்தானத்தில் இடம் பெற வேண்டும் என்று அனைத்து கிரகங்களுக்கும் ஆணையிட்டான். இராமாயாண காலத்தில் ராகு, கேதுககள் கிடையாது. மற்ற கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்களும் இராவணனுக்கு அடிமைப் பட்டுக் கிடந்தன. அந்த 7 கிரகங்களையும், இராவணன் தனது ஆசனத்திற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களாக்கி அவற்றின் நெஞ்சில் ஏறி மிதித்து தனது ஆசனத்தில் அமர்ந்து கொள்வான்.  இதை தனது நித்திய செயலாகக் கொண்டிருந்தான். படிக்கட்டுகளில் இராவணனது ஆணைக்குக் கட்டுப்பட்டுக் கிடந்த கிரகங்களில் சனி பகவானைத் தவிர மற்ற கிரகங்கள் நிமிர்ந்து படுத்துக் கொண்டிருந்தன. சனி பகவான் மாத்திரம் குப்புறப் படுத்து அதாவது கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தார். தேவர்களையும், ரிஷிகளையும் இராவணன் ஆட்டிப் படைத்ததோடு கிரகங்களையும் அடிமையாக்கி வைத்திருந்ததைக் கண்டு தேவர்களும், ரிஷிகளும் ஸ்ரீமந் நாராயணனிடம் முறையிட இந்தச் செய்தியை செவிமடுத்த ஸ்ரீமந் நாராயணன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து தான் இராமாவதாரம் எடுத்து இராவணனை வதம் செய்வதாகக் கூறினார்.  இதன் முதல் கட்டமாக நாரத மகரிஷி இராவணனது அரண்மனைக்குச் சென்று இராவணனைச் சந்தித்தார். அப்போது கிரகங்கள் அனைத்தையும்  தனது ஆசனத்திற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களாக்கி வைத்திருப்பதைக் கண்டார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. 'ஒரு மனிதனுக்குக் கேடு காலம் வர வேண்டும் என்றால் அவனை சனி பார்த்தால் உடனே அவனுக்குக் கேடு வந்து விடாதோ?' என்று அவருக்குத் தோன்றியது. உடனே சாமர்த்தியாமாக இராவணனைப் பார்த்து, 'இராவணா! சனியைத் தவிர அனைத்துக் கிரகங்களும் நிமிர்ந்து படுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நெஞ்சில் மிதித்து ஏறுவது போல் சனியின் நெஞ்சிலும் நீ மிதித்து ஏற வேண்டாமா?' என்று நாரதர் இராவணனை முடுக்கி விட்டார். இராவணன் மிகவும் புத்திசாலிதான்.  இருந்தும் என்ன செய்ய? அவனது போதாத காலமோ என்னவோ அவனது புத்தி வேலை செய்யவில்லை. சனி பகவானை நோக்கி, 'சனியே! நிமிர்ந்து படு!  நான் உன் நெஞ்சில் மிதித்து ஏறி என் ஆசனத்திற்குச் செல்ல வேண்டும்' என்று ஆணையிட்டான் இராவணன். சனியும் நிமிர்ந்து படுத்தான். அவனது பார்வை இராவணன் மீது விழுந்தது. அவனது கெட்ட நேரம் தொடர்ந்தது. இனி மேலே கூறிய விஷயத்திற்கு வருவோம். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு (இந்திரஜித்) (நவகிரகங்களை தனக்கு ஏறிச் செல்லும் படிகளாக ஆக்கிக் கொள்வதற்கு முன்பே) இராமனால் அழிவு உண்டாகி விடக் கூடாது என்று கிரகங்கள் அனைத்தையும் தனது புதல்வனின் (இந்திரஜித்) ஜாதகத்தில் லாப ஸ்தானத்தில் அமரும் படி கட்டளை இடுகிறான்.இதை அறிந்த நாரத மகரிஷி சனி பகவானிடம் 'அனைத்து கிரகங்களும் லாப ஸ்தானத்தில் இடம் பெற்று விட்டால் இவனுக்கு அழிவே கிடையாது என்றாகிவிடும். அப்படி ஆகி விட்டதென்றால் இந்த அசுரர்களால் அனைவருக்கும் தொல்லையே' என்று கூறி மேலும், 'நீ மெதுவாக உனது காலை 12ம் வீட்டில் வைத்துவிடு.' என்றும் ஆலோசனை கூறினார். அதன் படியே சனி பகவானும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 12ம் வீட்டில் காலை எடுத்து வைத்து விட்டார். இதைக் கண்ட இராவணன் கோபம் கொண்டு சனி பகவானின் காலை வெட்டினான். ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீராமவதாரம் எடுப்பதற்குக் காரணம் இராவணன் தேவர்களையும், கிரகங்களையும் துன்புறுத்திய காரணத்தினால்தான். கிரகங்களை சிறைப் பிடித்த இராவணன் அவர்களைப் படிக்கட்டுக்களாக்கி சனியின் பார்வை அவன் மேல் விழுந்த போது அவனுக்குக் கேடு காலமும் ஆரம்பித்தது. பொதுவாக ஜோதிடர்கள் அனைவருமே இராமாயணத்தில் இடம் பெற்ற இந்த விஷயத்தை தனது வலைப் பதிவுகளில் எழுதியிருக்கிறார்கள், ஆகையினால் இது புதிய விஷயமல்ல. ஆனால் இந்திரஜித் இராமாயணப் போரில் மடிந்ததற்கு இன்னும் ஒரு முக்கிய காரணமும் ஒன்று உண்டு. அதாவது இராவணன் சனி பகவானின் காலை வெட்டிய போது அவரது காலில் இருந்து விழுந்த சதைப் பிண்டமானது லக்னத்தில் போய் விழுந்தது. இந்த சதைப் பிண்டமே மாந்தி. ஒரு ஜாதகத்தில் ஒரு மனிதனின் நிலையை அப்படியே புரட்டிப் போடுகிறவன் மாந்தி. சிலர் மாந்தியை சனி பகவானின் மைந்தன் என்பர். எனவே தகப்பனும், பிள்ளையுமாகச் சேர்ந்து இந்திரஜித்தின் மரண ஒலையை எழுதினார்கள் என்று கூறினால் மிகையாகாது. சரி. ஆனால் மக்களில் ஜோதிடத்தை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். நம்பாதவர்களும் இருக்கிறார்கள்,  ஜோதிடத்தை நம்பாத ஒருவன் இது வரை வாழ்வில் சந்தோஷத்தையே அனுபவித்திருந்து தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணம் தன் உழைப்பே தவிர இதில் ஜோதிடம் என்பது எங்கிருந்து வ்ந்தது? என்று மிகவும் ஆணித்தரமாகப் பேசியவன் கூட தன் தொழிலில் சோதனை எற்பட்டு தனக்கு ஒரு கஷ்டம் என்று ஒன்று வரும் போது ஒரு வேளை ஜோதிடம் உண்மையாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் அவனுக்குத் தோன்றுகிறது. ஜோதிடத்தில் அவ நம்பிக்கை எப்போது ஏற்படுகிறது? உதாரணமாக சென்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்ற கேள்விக்கு பல ஜோதிடர்கள் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன? இதுதான் ஜோதிடத்தை பலர் நம்பாததற்குக் காரணம். ஆனால் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வருவார் என்று சொன்ன சில ஜோதிடர்களும் உண்டு. ற்போது நடந்து முடிந்த தேர்த்லில் ஜெயிக்கப் போவது தி.மு.கவா அல்லது அ.தி.மு.கவா என்று பல ஜோதிடர்களும் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் கூறினார்கள். அதில் ஒரு சில ஜொதிடர்கள் மட்டுமே மிகச்சரியாக அ.தி.மு.க கட்சிதான்வெற்றி அடையப் போகிறது  என்று மிகத் தெளிவாகக் கூறினார்கள்.ஏன் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று அவரது ஜாதகத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் தெரியும். கீழே தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.இதுதான் தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்.இவருக்கு 24-11-2011 வரை ராகு திசா காலம் நடப்பில் இருந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் நடந்த சமயமும், தேர்தல் முடிவுகள் வெளி வந்த சமயமும் அவருக்கு ராகு திசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தது. ராகுவும், செவ்வாயும் இவருக்கு யோகத்தைக் கொடுப்பவர்கள்.  ஜாதக ரீதியாகவும் சரி அன்றைய தினம் கோட்சார ரீதியாகவும் சரி கிரகங்கள் அனைத்தும் அம்மாவிற்கு அருமையாக ஒத்திழைத்தது. ஆகையால் இவரால் வெற்றி அடைய முடிந்தது. அன்றைய கோட்சாரமும் அவருக்கு ஒத்துழைத்தது. இதுதான் அவர் வெற்றி அடையக் காரணமாகும். 

Saturday, February 18, 2012

ஜோதிடப் பாடங்கள் 5.


ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஜாதகத்தில் லக்னத்தை முதல் வீடு என்கிறோம். அதிலிருந்து எண்ணி வரும் 5ம் வீட்டை புத்தி ஸ்தானம் என்றும், புத்திர ஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் கூறுகிறோம். 9ம் வீட்டைப் பாக்கிய ஸ்தானம் என்றும் கூறுகிறோம். 1, 5, 9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் எனப்படும். 1, 4, 7, 10ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் எனப்படும். 2ம் வீடு தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் எனப்படும். 11ம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். இதை சென்ற பாடத்திலேயே கூறியிருக் கிறேன். இப்போது மீண்டும் இதையே நியாபகப் படுத்துகிறேன்.  இப்போது நான் மேலே சொன்ன வீடுகள் யாவும் சுப வீடுகள். அதோடு போன பாடத்தில் சொன்ன சர, ஸ்திர, உபய ராசிகளையும் மீண்டும் நியாபகப் படுத்து கிறேன். மேஷம், கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சர ராசிகள். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை நான்கும் ஸ்திர ராசிகள். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை நான்கும் உபய ராசிகள்.
மேலே சொன்ன 1, 5, 9, 4, 7, 10, 11, 2 ஆகிய வீடுகள் யாவும் சுப வீடுகள். ஆனால் இந்த சுப வீடுகளில் சில வீடுகள் பாதக வீடுகளாகவும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சர ராசி ஒருவருக்கு லக்னமாக வந்தால் 11வது வீடாகிய லாப வீடே பாதக வீடாக செயல்படும். அதாவது மேஷ ராசி லக்னமாக வ்ந்தால் அதாவது மேஷம் லகனமாக வந்தால் 11ம் வீடாகிய கும்ப ராசியாகிய லாப ஸ்தானமே பாத்க ஸ்தானமாக செயல்படும். அதே போல் இன்னோரு சர ராசியாகிய கடக ராசியே லக்னமாக வந்தால் அதாவது கடகம் லக்னமானால் இதன் 11ம் வீடாகிய ரிஷப ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். துலா லக்னமாக வந்தால் சிம்ம ராசியாகிய 11ம் வீடு பாதக ஸ்தானமாக செயல்படும். மகர லக்னமாக வந்தால் இதன் 11ம் வீடாகிய விருச்சிக ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். இதே போல் ஸ்திர ராசியான ரிஷபம் லக்னமாக வந்தால் 9ம் வீடாகிய பாக்கிய ஸ்தானமான மகர ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். இன்னோரு ஸ்திர ராசியான சிம்மம் லக்னமாக வந்தால் 9ம் வீடான மேஷ ராசி பாதக ஸ்தானமாக் செயல்படும். விருச்சிகம் லக்னமாக வந்தால் கடக ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். கும்பம் லக்னமாக வந்தால் துலா ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். இதே போல் உபய ராசியான மிதுனம் லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான களஸ்திர ஸ்தானமான தனுசு ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். கன்னி லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான மீன ராசியே பாதக ஸ்தானமாக செயல்படும். தனுசு லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான மிதுன ராசி பாதக ஸ்தானமாக செயல்படும். மீனம் லக்னமாக வந்தால் அதன் 7ம் வீடான கன்னி பாதக ஸ்தானமாக செயல்படும். எனவே ஒரு ஜாதகத்தை ஆராயும் போது அந்த ஜாதகத்தில் முதலில் எது பாதக ஸ்தானம் என்பதை ஆராய்ந்து பதில் கூறினால் பலன்கள் மிகச் சரியாக இருக்கும். அது மாத்திரம் அல்லாமல் அனைத்து லக்னங்களுக்குமே 2, 7ம் வீடுகள் மாரக ஸ்தானைங் களாகும். மாரகம் என்றால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான விஷயங்கள் என்று அர்த்தம். இதில் 2ம் அல்லது 7ம் வீட்டில் உள்ள கிரகங்களின் திசா காலம் நடக்கும் பொழுது அவை மாரக பலனைக் கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. பால்யவயதாகவோ அல்லது மத்திம வயதாகவோ இருக்கும் நேரத்தில் இந்த திசா காலங்கள் வந்தால் 2ம் வீட்டிலிருக்கும் கிரகத்தின் திசா காலம் வந்தால் தன, குடும்ப, வாக்கிற்குரிய பலன்களை அந்த கிரகம் 2ம் வீட்டில் எந்த நிலையில் இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்து நல்ல அல்லது கெட்ட பலன்களாகச் செய்யும். 7மிடத்தில் ஒரு கிரகம் இருந்து திசா நடத்தினால் திருமண வாழ்க்கை எப்படி என்பது பற்றிச் சொல்லும்.  மாரக பலன்கள் எப்போது நடைபெறும் என்றால் அந்த ஜாதகனது ஆயுள் ஸ்தானம், சனியின் நிலைமை இவர்களைப் பொறுத்துத்தான் 2, 7ம் வீடுகள் மாரக பலன்களை தனது புக்திக் கால்த்தில் வழங்குவார்கள். எனவே 2, 7ம் வீட்டில் உள்ள கிரகைங்களின் திசா காலங்கள் வந்து விட்டால் மாரகத்தைச் செய்யும் என்று தவறான முடிவுக்கு வரக் கூடாது.  
ஆக 1, 4, 7, 10, 5, 9, 2, 11 ஆகிய வீடுகள் எப்பொழுது நல்லவர்கள், எப்போது கெட்டவர்கள் என்பதை மிக நன்றாக துல்லியமாக ஆராய்ந்த பின்னரே பலன்களைத் தெளிவாகச் சொல்ல முடியும் என்பது தெரிகிறது.

Thursday, February 16, 2012

ஜோதிடப் பாடங்கள் 4.


ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த 12 ராசிகளை அந்தக் காலத்திலேயே ரிஷிகள் மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளையும் சர ராசிகள் என்றும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு ராசிகளையும் ஸ்திர ராசிகள் என்றும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளையும் உபய ராசிகள் என்றும் வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதன் விளக்கத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
  மீனம்
 உபயம்
 மேஷம்
    சரம்                    
ரிஷபம்
  ஸ்திரம்
 மிதுனம்
  உபயம்
  கும்பம்
  ஸ்திரம்

         ராசிக்கட்டம்
 கடகம்
  சரம்
  மகரம்
   சரம்
 சிம்மம்
   ஸ்திரம்
 தனுசு
  உபயம்
 விருச்சிகம்
   ஸ்திரம்
 துலாம்
   சரம்
கன்னி
   உபயம்

Wednesday, February 15, 2012

ஜோதிட சூக்சும விபரங்கள்


ஜோதிட சம்பந்தமாக ஒரு மனிதன் தனது எதிர் காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்து ஒரு ஜோதிடரைணுகும் போது அந்த ஜோதிடர் அவரது ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அதாவது சூக்சும விஷயங்களை நன்கு ஆராய்ந்து அவரது கடந்த கால விஷயங்களை முதலில் கூறி விட்டார்கள் என்றால் அவர் சொல்லும் எதிர் கால பலன்களின் மேல் வந்தவருக்கு முழுவதுமாக நம்பிக்கை ஏற்பட்டு விடும். நான் இப்படிக் கூறுவதற்குக் காரணம் என்னவென்றால் ஜோதிடர்களின் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் காரத்தினால்தான். ஆகையால் அந்த சூக்சும விபரங்களைப் பற்றியே எழுத வேண்டும் என்பதே என் எண்ணம். பொதுவாக ஜாதகத்தில் இடம் பெற்றிருக்கும் ராசிகள் பன்னிரெண்டு என்பதும், இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் ஒன்பது என்பதும், இடம் பெற்றிருக்கும் நட்சத்திரங்கள் இருபத்தேழு என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்தப் பன்னிரெண்டு ராசிகளில் ஒன்பது கிரகங்களும் இருபத்தேழு நட்சத்திரங்களில் எந்தெந்த நட்சத்திரத்தில் நின்று கொண்டு தனது திசா காலத்தில் எவ்விதமான பலனை செய்கின்றன என்பது ஒரு சூக்சும விஷயம். உதாரணமாக என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவருக்கு மேஷ லக்னம். இந்த லக்னத்திற்கு 11ம் வீடாகிய கும்ப ராசியில் சனி பகவான் ஆட்சி நிலையில் அமர்ந்து கொண்டு பலன்களை தனது திசா காலத்தில் செய்து முடித்து அதன் பிறகு அவருக்கு புதன் திசா காலம் நடக்கும் தறுவாயில் என்னிடம் வந்தார். அவரது ஜாதகத்தை ஆராய்ந்த போது அவரது சனி திசா காலம் அவரை மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கும் என்று தெரிய வந்தது. அதைப் பற்றி அவரிடம் கேட்ட பொழுது அவர் என்னிடம், 'எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள்' என்று கேட்டார். அதோடு சில ஜோதிடர்களை அணுகி அதாவது சனி திசா காலம் ஆரம்பித்த சில வருடங்களில் சொந்தத் தொழில் செய்யும் விஷயமாக அவர்களிடம் ஆலோசனை கேட்ட பொழுது அவர்கள் 'சனி பகவான் அவரது ஜாதகத்தில் லாப வீட்டில் இருப்பதால் ஏராளமான லாபத்தை சம்பாதிக்க முடியும். எனவே பேஷாகத் தொழில் தொடங்கலாம்' என்று கூறியதை நம்பி அவரும் தொழில் தொடங்கியிருக்கிறார். ஏகப் பட்ட நஷ்டம். 'ஏன் அந்த ஜோதிடர்களின் வார்த்தை பொய்த்தது' என்று அவர் என்னிடம் கேட்ட போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஜாதகத்தை நன்கு சூக்சுமமாக ஆராயாததன் விளைவுதான் இது. அப்போது அவரிடம் நான் கூறிய விஷயம் என்னவென்றால் 'ஒரு லக்னத்திற்கு 11ம் வீடு லாப வீடுதான். ஆனால் மேஷ லக்னம் சர லக்னம். சர லக்னங்களுக்கு லாப வீடாகிய 11ம் வீடே பாதக வீடாக இருப்பதனால் அந்த 11ம் வீட்டில் இடம் பெற்றிருக்கும் சனி பகவான் தனது திசா காலத்தில் பாதக விளைவுகளை த்தான் செய்வாரே தவிர நன்மைகளைச் செய்ய மாட்டார்' என்பதுதான். இங்கே நான் ஒரு சிறிய உதாரணம்தான் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும். தற்போது நடந்து முடிந்த தேர்த்லில் ஜெயிக்கப் போவது தி.மு.கவா அல்லது அ.தி.மு.கவா என்று பல ஜோதிடர்களும் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் கூறினார்கள். அதில் ஒரு சில ஜொதிடர்கள் மட்டுமே மிகச்சரியாக அ.தி.மு.க கட்சிதான்வெற்றி அடையப் போகிறது  என்று மிகத் தெளிவாகக் கூறினார்கள்.ஏன் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று அவரது ஜாதகத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் தெரியும். கீழே தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.இதுதான் தற்போதைய  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்.இவருக்கு 24-11-2011 வரை ராகு திசா காலம் நடப்பில் இருந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் நடந்த சமயமும், தேர்தல் முடிவுகள் வெளி வந்த சமயமும் அவருக்கு ராகு திசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தது. ராகுவும், செவ்வாயும் இவருக்கு யோகத்தைக் கொடுப்பவர்கள். ஆகையால் இவரால் வெற்றி அடைய முடிந்தது. அன்றைய கோட்சாரமும் அவருக்கு ஒத்துழைத்தது. இதுதான் அவர் வெற்றி அடையக் காரணம்.

ஜோதிடப் பாடங்கள் 3.


மீனம்
 12
 மேஷம்
 1  (லக்னம்)
ரிஷபம்
 2
மிதுனம்
 3
கும்பம்
 11

ராசிக்கட்டம்
கடகம்
 4
மகரம்
 10
சிம்மம்
 5
தனுசு
 9
விருச்சிகம்
 8
துலாம்
 7
கன்னி
 6
ஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ, அல்லது 'லக்னம்' என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல் வீடாகும். இங்கே கொடுத்திருக்கும் ராசிக் கட்டத்தைப் பாருங்கள். இங்கே 'லக்னம்' என்று குறிப்பிட்டிருக்கும் ராசி மேஷ ராசி. எனவே இதுவே முதல் வீடு. இதிலிருந்து வரிசைக் கிரமமாக எண்ணினோம் என்றால் ரிஷபம் 2வது வீடு. மிதுனம் 3வது வீடு. கடகம் 4வது வீடு. சிம்மம் 5வது வீடு. கன்னி 6வது வீடு. துலாம் 7வது வீடு. விருச்சிகம் 8வது வீடு. தனுசு 9வது வீடு. மகரம் 10வது வீடு. கும்பம் 11வது வீடு. மீனம் 12வது வீடு.  இனி இந்த 12 வீடுகளின் காரக பலன்களைப் பார்க்கலாம். காரக பலன் என்றால் ஒரு ராசியானது என்னென்ன விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது என்று அர்த்தம். அதோடு லக்னம் முதல் 12 வீடுகளுக்கும் ஒவ்வொரு கிரகங்கள் காரகர்களாக அமைவார்கள். அவர்களையும் கீழே கொடுத்திருக்கிறேன். ஒரு ஜாதகத்தில் லக்னமாகிய முதல் வீட்டைக் கொண்டு தலை, உடல், உயிர், அவயவங்கள், சுபாவம், ஆயுள், சந்தோஷம், அறிவு, பிரபலம், கெளரவம், பலம், ஆரோக்கியம், செயல் திறன், சுய மரியாதை, கர்வம், அமைதி, பாண்டித்யம், வருத்தம், அதிருப்தி, இழுக்கு, கண்ணியம், வயது, ரூபம் (தோற்றம்), நிறம், வடுக்கள், சுகம், துக்கம், சாகஸம் இவற்றை அறிய முடியும். இவையே லக்னத்தின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் சூரிய பகவான். லக்னத்திலிருந்து 2ம் வீட்டின் காரக பலன்களை இனி பார்க்கலாம். பெரும் செல்வம், பருவம், நெற்றி, மனைவி, முகம், வலது கண், படிப்பு, உணவு, தன வருவாய், குடும்பம், சொல் வன்மை, உண்மை, நேர்மை, நாக்கு, மூக்கு, பாண்டித்யம், வித்தை, நண்பர்கள், குடும்ப உறவு, திடபுத்தி, வியாபாரத்தில் வருவாய், செல்வம், சேமிப்பு, பரோபகார சிந்தனை, திட மனது, பணிவு, சாஸ்திரங்களில் நம்பிக்கை, சிக்கனம், பொய், கபடு, கலை இவற்றை அறிய முடியும். இவையே லக்னத்திலிருந்து 2ம் வீட்டின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். 
லக்னத்திலிருந்து 3ம் வீட்டின் காரக பலன்களை இனி பார்க்கலாம். வீரம், இளைய சகோதரம்,  வலது காது, பராக்கிரமம், காதில் அணியக் கூடிய பொன் நகைகள், காது, நோய், இசை, துணைவர்,  ஆளடிமை, தைரியம், தீரச் செயல்கள், மனக் குழப்பம், சித்தப் பிரமை, தெளிவு, கனவுகள், உறவினர்கள்,  அலைதல், நற்பண்பு, பொழுது போக்கு, உடல் வலிமை, உடல் வளர்ச்சி இவை யாவும் 3ம் வீட்டின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான்.


இனி லக்னத்திலிருந்து 4ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். தாய், கல்வி, வாகனங்கள், சொத்துக்கள், சுகம், வீடு, நிலம், தோட்டம்,  கிணறு, நீர் நிலை, பால், பவளம், நன்னடத்தை, ஒழுக்கம் கெடுதல், வேத சாஸ்திரங்களை விருத்தி செய்தல், உயர் கல்விப் படிப்பு, உறவினர்கள், நண்பர்கள், கலை, இலக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஆடை, ஆபரணம், கால்நடைகள், செல்வம், தந்தையின் ஆயுள், சேமிப்பு, நல்லறிவு, சுகக் கேடுகள், மனைவியுடன் அந்தரங்க வாழ்க்கை அல்லது மனைவி அல்லாதவளுடன் திருட்டு சுகம் அனுபவித்தல் இவை யாவும் 4ம் வீட்டின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் சந்திர பகவான். 
இனி லக்னத்தியிருந்து 5ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். பூர்வ புண்ணியம், புத்திரம், நன்னடத்தை, புத்தி கூர்மை, விவேகம், மந்திரம் கற்றல், மந்திரப் பிரயோகம், உபாசனை, பாவ புண்ணியம் பார்த்தல், பாண்டித்யம், ஆழ்ந்த சிந்தனை, பரம்பரைப் பதவி, சந்தோஷம், உல்லாசம், இலக்கியத்தில் புலமை, நீண்ட நூல்கள் எழுதுதல், தந்தை வழி வம்ச விருத்தி, சாஸ்திர விருத்தி, அன்பு, மார்பு, இதயம், பிரபுத்துவம், தந்தை, தாய் மாமன், மந்திர சாஸ்திரம்,  முற்பிறப்பில் செய்த நற்செயல்கள், புத்திர, புத்திரிகள், புலவர்களால் பாராட்டிப் பாடப் பெறுதல், தவம், முன் ஜென்மம், தனம், புத்திர வர்க்கம் ஆகியவை யாவும் 5ம் வீட்டின் காரக பலன்கள். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். 
இனி லக்னத்திலிருந்து 6ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். கடன், வஞ்சனை, காயம், பசி, எதிரி, நோய், தடை, தாமதங்கள், தாய் மாமன், கொடூரச் செயல், அவதூறு, எதிரியின் மகிழ்ச்சி, எதிரியால் நஷ்டம், யுத்தம், மனக் கவலை, வேதனை, அகால போஜனம், உறவினருடன் கருத்து வேறுபாடு, அனைவராலும் வெறுக்கப் படுதல், சோம்பேறித்தனம், உடல் வீக்கம், களைப்பு, சிக்கனம், அடிமை, கடின உழைப்பு, உட்பகை, பங்காளிகளுடன் வழக்காடுதல், ஆயுத பயம், திருடர்களால் பயம், அரசாங்க சிறைத் தண்டனை ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான். 
இனி லக்னத்திலிருந்து 7ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். களஸ்திரம், திருமணம், காதல், அனைவரும் வசியமாதல், வியாபாரம், வாடிக்கையாளர்கள், பகைவர்களின் அழிவு, நீண்ட பிரயாணம், அன்பளிப்பு, பாலுறுப்புக்கள்,  இரு மனைவிகள், மரணம், வெற்றி, தத்துப் புத்திரன், பணப் பாதுகாப்பு, பாலுறவு, வாக்குவாதம், கற்பு நிலை, திருட்டு, அதிகாரம் குறைதல், சுகபோகம், சுகமான திருமணம், திருமணம் நடைபெறும் திசை, சிற்றின்பம் ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிர பகவான். 
இனி லக்னத்திலிருந்து 8ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அவமானம், தூக்கம், கொலை, ஆயுள், கலகம், கெட்டபெயர், துன்பம், மரணம், விவகாரம், ஆபத்து, நீடித்த நோய், பண விரையம்,  வீண் பொழுது போக்கு, எதிர்பாராதது நடைபெறுதல், சொம்பேறித்தனம், பாவச் செயல்களைச் செய்தல், அங்ககீனம், கடும் வேதனை ஆகியவற்றை அறியலாம். பொதுவாக 8ம் பாவம் ஆயுளைப் பற்றிச் சொல்லும். இவை அனைத்திற்கும் காரகர் சனி பகவான். இனி லக்னத்திலிருந்து 9ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். இந்த வீட்டிற்கு தர்ம ஸ்தானம் என்ற பெயரும் உண்டு. தர்மம், நல்லொழுக்கம், புண்னிய தீர்த்தங்களை நாடுதல், தவம், மற்றவரை அல்லது பெரியவரை மதித்தல், நல்ல தெளிவான புத்தி, பக்தி, முயற்சி பலிதம். அபூர்வ விஷயங்கள், செல்வச் செழிப்பு, பெருந்தன்மை, மதிப்பு, மரியாதை, சத்சங்கம், மகிழ்ச்சி, தகப்பனார் வழிச் சொத்து, குதிரைகள், யானைகள், கறவை மாடுகள், அந்தணர்க்குரிய வாழ்க்கையை மேற்கொள்ளுதல்,  யாகங்களை மேற்கொள்ளுதல், பணப் புழக்கம், பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளுதல், கோவில் திருப்பணி, மந்திர உபதேசம், அஷ்டமாசித்தி பெறுதல், நல்லோர் சேர்க்கை, மனத் தெளிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். இனி லக்னத்திலிருந்து 10ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அரசு மரியாதை, குதிரை சவாரி, பிரபுத்துவம், புகழ், மரியாதை, அந்தஸ்துள்ள வாழ்வு, உயர் அதிகாரம், சுபிட்ச காலம் அல்லது கெட்ட நேரம்,  தெய்வ வழிபாடு, அரசாங்க சேவை, விவிசாயம், வியாபாரம், வைத்தியம், தொடைகள், மந்திர உச்சாடனம் செய்தல்,  வெற்றி, சித்தி பெறுதல், மரியாதைக்கு உரியவராதல், செளகரியம், கீர்த்தி போன்றவற்ரை அறியலாம். இவை அனத்திற்கும் காரகர்கள் சூரியன், புதன், குரு, சனி ஆகியோர் ஆவர். இனி லக்னத்திலிருந்து 11ம் வீட்டின் காரக பலன்களைப் பார்க்கலாம். அனைத்து லாபம் அல்லது நஷ்டம், கெட்ட எண்ணங்கள்,  வரவுகள், சார்ந்து நிற்பது, மூத்த சகோதரம், புத்தி கூர்மை, தகப்பன் வழிச் சொத்து, சகல வித வருமானம், ஆசைகள் நிறைவேறுதல், அதிர்ஷ்டம், கலைகளில் திறமை, மூதாதையர் சொத்து கிடைத்தல்,  களஸ்திர மகிழ்ச்சி, பொன் பொருள் சேர்க்கை, குறிக்கோளை அடைதல்,  இடது காது, நல்ல அல்லது கெட்ட விஷயங்களில் ஆசை, அதி சூக்சுமமான புத்தி, நல்ல காலம் ஆரம்பித்தல், அனைத்திலும் வெற்றி, தாயின் ஆயுள், விவேகம், தேவதைகளை பூஜித்தல் ஆகியவற்றை அறியலாம். பொதுவாக 11ம் பாவம் மூலம் சகல வித லாபம், மூத்த சகோதரம், ஆசைகள் நிறைவேறுதல் முதலியவற்றை அறியலாம். இவை அனைத்திற்கும் காரகர் குரு பகவான். இனி 12ம் வீட்டின் காரக பலன்களைப் பற்றி அறியலாம். நித்திரை அல்லது நித்திரை பங்கம், மனத் துயரம், மன மகிழ்ச்சி, எதிர்கால பயம் அல்லது வியாதிகளால் பயம் அல்லது விடுதலை, கடன் அடைத்தல், மாட மாளிகைகள், சொத்துக்கள், இடது கண், பொது ஜன விரோதம், அங்ககீனம், வீரம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், படுக்கை, வேலை நீக்கம், சிறை வாசம், மனக் கொந்தளிப்பு, பொல்லாத்தனம், அற்புதத் தன்மை, எதிர்பாராத பேரிடிகளை சந்தித்தல், வழக்குகளில் வெற்றி அல்லது தோல்வி, மரணம், வெளியூர் அல்லது அந்நிய தேச வாசம், மனைவியின் மரணம், துக்கம், கால்கள், இடது கண், நஷ்டம், இறங்கு முகம்,  விரையம், உளவாளி, கோள் சொல்தல், கடைசி நாட்கள், வறுமை, பாபங்கள், சயன சுகம் அல்லது சுகமின்மை, காவலில் வைக்கப் படுதல், மோட்சம், இராஜ தண்டனை முதலியவற்றை அறியலாம். பொதுவாக 12ம் வீட்டின் மூலம் பண விரையம், கஷ்டங்கள், சிறைவாசம், எதிரி முதலியவற்றை அறியலாம்.  இவை அனைத்திற்கும் காரகர் சனி பகவான். இது வரை 12 ராசிகளும் நமக்கு என்ன விதமான பலன்களைச் செய்கின்றன என்றும், அந்த பலன்களைச் செய்யும் கிரகங்கள் என்னென்னவென்றும் பார்த்தோம். அதாவது ஒரு பலனை ஒரு ராசி செய்கிறது என்றால் அந்த வீட்டின் பலனை அதில் இடம் பெற்றிருக்கும் கிரகமும் சேர்ந்து செய்யும் என்று அர்த்தம். அதாவது ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்த உடன் அந்த மனிதனின் ஜாதகத்தில் இடம் பெறும் கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் இடம் பெறுகின்றன என்பதையும் அந்த ராசியின் பலன்கள் என்னென்ன என்பதையும், அந்த ராசிகளில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் எந்தெந்த விதத்தில் நன்மைகள் அல்லது தீமைகளைச் செய்கின்றன என்பதையும் மிகத் துல்லியமாக ஆராய வேண்டும். இனி அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.

Saturday, February 11, 2012

ஜோதிடப் பாடங்கள் 2


ஒரு மனிதன் பணக்காரனாகவோ, அல்லது ஏழையாகவோ பிறப்பதும், அல்லது ஒரு ஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழை ஆவதும் அவரவர் ஜாதக ரீதியாகவே நடைபெறுகின்றன. ஒரு ஜாதகத்தில் 12 ராசிகள் இடம் பெறுகின்றன. இந்தப் ப்ன்னிரெண்டு ராசிகளுக்கும் 9 கிரகங்கள் அதிபதியகிறார்கள்.  கீழே அதன் விளக்கப் படத்தைக் கொடுத்திருக்கிறேன். 
இதே போல் இந்த ஒன்பது கிரகங்களுக்கும்  உரிய வீடுகளைப் பற்றியும் (Houses of Planets) மற்ற வீடுகளில் இருக்கும் போது அவைகளுக்கு உள்ள சக்தியைப் (Power) பற்றியும் உங்களுக்கு அட்டவணையாக்கித் தந்துள்ளேன். அதாவது சக்தி என்பதன் அர்த்தம் என்ன்வென்றால் எந்தெந்த வீட்டில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற பலன்களைச் செய்கின்றன? என்ற விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். அதோடு எந்த வீட்டில் பகை, நட்பு என்ற விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். பொதுவாக ஒரு ராசிச் சக்கரத்தில் 12 ராசிகள் உண்டு. இந்த பன்னிரெண்டு ராசிகளில் ஒரு வீடு 'லக்னம்' என்பதே ஆகும்.  இந்த 'லக்னம்' என்பதை ஜோதிடர்கள் ஜாதகங்களில் 'லக்னம்' என்றோ, அல்லது 'ல' என்றோ, அல்லது 'லக்' என்றோ குறிப்பிட்டிருப்பார்கள். இந்த வீட்டையே முதல் வீடாகக் கொண்டு ஜோதிடர்கள் அவரவர்க்குரிய பலன்களைச் சொல்வார்கள். லக்னம் என்றால் என்ன? ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பூமியில் வந்து பிறக்கும் நேரத்தின் அந்த மையப் புள்ளிதான் 'லக்னம்' என்பதாகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது முதலான 9  கிரகங்களும் அந்த 'லக்னம்' என்ற மையப் புள்ளியி லிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனவோ அதன் படி அந்த ராசிச் சக்கரத்தில் இடம் பெறுவார்கள். 'லக்னம்' இடம்பெறும் வீட்டை 1ம் வீடு என்றும், அதற்கடுத்த வீடுகளை வரிசைக் கிரமமாக எண்ணிப் பார்க்க 12 வீடுகளையும் தெரிந்து கொள்ளலாம். அவற்றில் அதாவது லக்னம் முதல் 12  வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன்களை அந்தந்த கிரகங்களின் திசா காலங்களில் செய்வார்கள். இதனை உதாரண ஜாதகங்களோடு இனி வரும் பாடங்களில் பார்க்கலாம். 

Thursday, February 9, 2012

ஜோதிடப் பாடங்ள் பகுதி 1.


ஜோதிட சாஸ்திரம் என்பது மிகமிக நுட்பம் வாய்ந்தது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை அவன் கடந்து வந்திருப்பான், என்னென்ன விஷயைங்களை அவன் அனுபவிக்கப் போகிறான் என்று மிக அற்புதமாக இந்த சாஸ்திரமானது அவரவர் ஜாதக ரீதியாக உண்மையை எடுத்துரைக்கும். இங்கே ஜோதிட விஷயங்களைப் பற்றிய மிக முக்கியமான அடிப்படை விஷயங்களைப் பற்றிக் கூறுகிறேன்.     ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 (பன்னிரெண்டு ராசிகள் உண்டு. அவையாவன:
 1. மேஷம்,
 2. ரிஷபம்,
 3. மிதுனம்,
 4. கடகம்,
 5. சிம்மம்,
 6. கன்னி,
 7. துலாம்,
 8.விருச்சிகம்,
 9. தனுசு,
10. மகரம்,
11. கும்பம்,
12. மீனம்.   
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு. அவையாவன: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோர். 12 (பன்னிரெண்டு) ராசிகளுக்கும் இந்த ஒன்பது கிரகங்களே அதிபதிகளாக வருகிறார்கள்.  
மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குருஜோதிட சாஸ்திர்த்தில் இந்த ஒன்பது கிரகங்கள் போக 12 ராசியிலும் 27 (இருபத்தியேழு) நட்ச்த்திரங்கள் இடம் பெறுகின்றன. அவையாவன: 
நட்சத்திரங்கள் விவரம்
இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களையும் நன்கு மனதில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதே போல் திதிகள் 15 (பதினைந்து) இருக்கின்றன. அதாவது இவை ஜாதகத்தில் அதாவது 12 ராசிகளில் இடம் பெறவில்லை. ஜோதிட சாஸ்திரத்திற்கு முக்கியமாகப் பஞ்சாங்கம் தேவை. இந்த பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது. அவையாவன:  வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையாகும். இதில் மேலே குறிப்பிட்டிருப்பது 27 நட்சத்திரங்கள் ஆகும். இங்கே கீழே குறிப்பிட்டிருப்பது 30 (முப்பது) திதிகள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம் ஆகும்.  திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.  திதியில் பாதி கரணம். அதாவது திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம். யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லும் மொத்த தூரம்.